முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-09-2015 அன்று நடைபெறுகிறது – மாவட்ட ஆட்சியர் தரேஸ்அஹமது தகவல்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22-09-2015 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், சார்ந்தோர் மற்றும் படைவீரர்களைச் சார்ந்தோர்கள் தங்களுடைய குறைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
மனுக்கள் சமர்ப்பிக்கும் போது முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் அவர்களது அடையாள அட்டை மற்றும் படைவிலகல் சான்று ஆகியவைகளைத் தவறாது கொண்டுவர வேண்டும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.