Welfare assistance on behalf of TMMK in Ramanathapuram East District
Presented by State President

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் தமுமுக சார்பில் ரூ.2.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் சமுதாய தலைவர் பாபா நாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில செயலாளர்கள் தொண்டி சாதிக்பாட்சா, சலிமுல்லாகான், மண்டபம் ஜைனுல் ஆபிதீன், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ, மாவட்டதலைவர் பட்டானி மீரான், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி பொருளாளர் பரக்கத்துல்லா, யாசர் அரபாத், தென்மண்டல தொண்டர் அணி செயலாளர் செயலாளர் நசிர் அஹமது, ஜாஹிர்ல ஜாவித், முகம்மது அலி, உபைதுல்லா, அன்சாரி, அபுதாஹிர், ரைசுல் இஸ்லாம் மற்றும் ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாவட்டம் சார்பில் பனைக்குளத்தில் மருத்துவ உதவியாக ரூபாய் ஒரு லட்சம், திருமண உதவியாக 95 ஆயிரம், வாழ்வாதார உதவிக்கு மூன்று தையல் இயந்திரம், கல்வி உதவியாக 5 ஆயிரம் என இரண்டு லட்சத்தி இருபது ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாநில தலைவர் பேராசிரியர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா வழங்கினார். ஏற்பாடுகள் பனைக்குளம் பரக்கத்துல்லா. பொறுப்புக்குழு தலைவர் இர்பான், கரீம் கனி, ஹாஜா நஜ்முதீன் ,சாதிக் அலி ,ரிஸ்வான்,பைசல் ,நதீம் ,அஜஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!