பெரம்பலூர் : பள்ளி கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் சம்பங்கிராமய்யா, சந்திரா, கலா, அமுதா, அறிவழகன், அன்பழகன், மனோகரன், ராஜேந்திரன், செபஸ்தியான்செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட துணை தலைவர் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு உட்பட பலர் பேசினர். மாநில இணை செயலாளர் சரவணசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
இதில் உறுப்பினர் சேர்க்கை, மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், எதிர்கால நடவடிக்கைகள், தீர்மானங்களை முன்மொழிதல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் கல்வித்துறை பணியாளர்களுக்கு இணை இயக்குனர், துணை இயக்குனர் பணியிடங்களை வழங்க வேண்டும், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் (கணக்கு) பணியிடம் வழங்க வேண்டும் என்பது உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ஜெயமுகுந்தன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.