பெரம்பலூர்: வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா; சுகிர்தராணி ஜூலினா கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு வேப்பந்தட்டையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை புதியதாக தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை 28 ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
அதாவது 28 ந் தேதி பி.எஸ்.சி கணிதம், கணினி அறிவியல் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், 29 ந் தேதி பி.ஏ தமிழ், ஆங்கிலம் மற்றும் பி.காம் பிரிவுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவா;கள் தங்களுடைய பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் 2, பாஸ்போட் சைஸ் புகைப்படம் 2 , ரூ.5 தபால்தலை ஒட்டி சுயமுகவரி எழுதிய உறைகள் 4,
மாற்றுத்திறனாளியாக இருந்தால் மருத்துவ சான்று மற்றும் நகல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கலந்தாய்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது