பெரம்பலூர் அருகே அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் கைது.

schedule
2017-11-19 | 01:58h
update
2026-07-04 | 07:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

10 persons arrested for sand smuggling near Perambalur

பெரம்பலூர், பிம்பலூர் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) நல்லுசாமி வி.களத்தூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், கல்லாற்றில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளை கொண்டு மணல் கடத்தப்படுவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் அதிகாரி திஷா மிட்டல் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பிம்பலூரை சேர்ந்த ஆறுமுகம் (வயது47), இவரது மகன் ஆனந்த் (25) ஆகியோர் கல்லாற்றில் டிராக்டர் வைத்து மணல் கடத்தியதும், மேலும் அவர்களுக்கு உடந்தையாக பிம்பலூரை சேர்ந்த பெரியசாமி(35), வி.களத்தூரை சேர்ந்த பிரகாஷ்(32), என்.புதூரை சேர்ந்த யாசின் (27), சதீஷ் (25), சிவா(30), சதீஷ்குமார்(32) ஆகியோர் செயல் பட்டதும் தெரியவந்தது.

இதேபோல் கல்லாற்றில் மாட்டு வண்டிகளை வைத்து பிம்லூரை சேர்ந்த சின்னதுரை(40), பிச்சைமணி(45) ஆகியோர் அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்டுத்திய டிராக்டர் மற்றும் 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 07:23:38
Privacy-Data & cookie usage: