3 hour road blockade by the public asking for drinking water, with empty buckets!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் இன்று தொடர் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்த சம்பவத்தால் 3 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேப்பூர் யூனியனின் தலைநகரமாக இருக்கும் வேப்பூரில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படததால், அப்பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளிலும், வயல் வெளி கிணறுகளிலும், பொதுமக்கள் குடிநீர் எடுத்து அலைந்து எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்திற்கும், யூனியன் ஆபிசிற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் திடீரென வேப்பூர் – குன்னம் செல்லும் சாலையில் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த விழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைப்பிடித்து சுமார் தொடர்ந்து 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வேப்பூர் – பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசாரும், ஊரக வளர்ச்சி அலுவலர்களும் நேரில் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உயர் அதிகாரிகள் நேரில் வரவேண்டும் எனக் கூறி மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்க்கு வந்த வேப்பூர் பி.டி.ஓ., மணிவாசகம், குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை தொடர்ந்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர். ஒரு வாரத்திற்குள் முழுவதுமாக குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும், அது வரை டேங்கர்களில் குடிநீர் விநியோகம் செய்யபடும் என உத்திரவாதம் அளித்தன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஆங்காங்கே மழை பெய்து தண்ணீர் ஓரிரு அடிகளில் நிலத்தடிநீர் மட்டம் உள்ள நிலையில், ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வினியோகிப்பதில் பாரபட்சத்துடன் அலட்சியம் காட்டுவது, வாக்களித்த பொதுக்கள் மீதான ஜனநாயகத்தின் மதிப்பை குறைப்பதை காட்டுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!