Admission of students in Government Music School: Perambalur Collector Information!

பெரம்பலூர்:  தமிழ்நாடு அரசு, கலைபண்பாட்டுத்துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் 2022 – 2023 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் 3 ஆண்டுகள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் 12 முதல் 25 வயது வரை உள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாதசுரம், தவில் மற்றும் தேவாரப் பிரிவுகளில் சேர தமிழ் எழுத, படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இதர பாடப்பிரிவுகளில் சேர 7-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு தனித் தனியே அரசு விடுதி வசதி உண்டு. மாணாக்கர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ. 400- வழங்கப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை பெறலாம்.

பயிற்சிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 350- செலுத்தவேண்டும். பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை. இப்பள்ளியில் சேர விரும்பும் மாணவர்கள் தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, எண். 1, மதனகோபாலபுரம், நான்காவது தெரு, பெரம்பலூர் என்ற முகவரியிலோ, அல்லது 04328-275466 என்ற தொலைபேசி எண்ணிற்கோ, 9842489148 என்ற கைபேசி எண்ணிற்கோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!