பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்ட மன்ற தொகுதி அதிமுக வேட்பாளரான ஆர்.டி.இராமச்சந்திரன், இன்று ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜெமீன் ஆத்தூர், மாக்காய்குளம். கூத்தூர், கூடலூர், திம்மூர், சில்லக்குடி, காரைப்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் வாக்கு சேகரித்தார்.
அப்போது கொளத்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பின் போது அங்கு இருந்த கிராம பொதுமக்கள் வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் கர்ணன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களுக்கு 50 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலமிட்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் அங்கு வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது; அம்மா தொலைநோக்கு சிந்தனை கொண்டவர், மக்களுக்காக வாழ்பவர், மக்கள் மேல் அக்கறை உள்ளவர், தாய் தன் குழந்தையை எப்படி கவனிக்கிறாரோ அதே போல் அம்மா தமிழகத்தை கவனித்து வருகிறார்.
பள்ளி மாணவிகளுக்கு நாப்கின், சைக்கிள், உள்ளிட்ட உபகரணங்கள், பெண்களுக்கு மிக்சி கிரைண்டர், பேன், தாலிக்கு தங்கம், கல்வியில் சலுகை, வேலைவாய்ப்பபில் முன்னுரிமை, மகப்பேறு கால விடுப்பு, மகப்பேறு உதவித் தொகை, மாணக்கர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட பல திட்டங்களை அம்மா வழங்கி உள்ளார்.
தேர்தல் அறிக்கையில், தகவல் தொழில் நுட்பத்தில் விரைந்து முன்னேறிட வீட்டுக்கு ஒரு ஆண்ட்ராய்டு செல்போன், தாலிக்கு தங்கம், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, வானம் பொய்த்து விவசாயிகளை வருத்த செய்தாலும், அம்மா வருந்த விடாமாட்டார் அதனால்தான் உலகிற்கு உணவு படைக்கும் உழவர்களுக்கு பயிர்கடன், உள்ளிட்ட அனைத்த கடன்களும் தள்ளுபடி, 100 யூனிட் இலவச மின்சாரம், முதியோர் உதவித் தொகை ரூ. 1500 ஆக அதிகரிப்பு, ஸ்கூட்டி வாங்கினால் 50 சதவீதம் மானியம், என பல அளப்பறிய திடடங்களை அறிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் 6 வது முறையாக அம்மா ஆட்சியில் அமர இரட்டை இலை சின்னத்தில் தன்னை வெற்றி அடைய செய்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கை, ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கோரி அங்கு திரண்டு ஆயிரக் கணக்கானோரிடம் வாக்கு சேகரித்தார்.