Advisory Meeting of all stakeholders of Perambalur District AIADMK
பெரம்பலூர் மாவட்ட அனைத்து பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தனலட்சுமி சீனிவாசன் ஹோட்டலில் மாவட்ட அவைத் தலைவர் இரா.துரை தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.ராமச்சந்திரன் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ இரா. தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், சிவப்பிரகாசம், வேப்பூர் கிருஷ்ணசாமி, பெரம்பலூர் ஆர்.பி மருதைராஜா, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மற்றும் குரும்பாபாளையம் சி.நாகராஜன், கல்பாடி கே.பி.ராமலிங்கம், மேலப்புலியூர் ரவிச்சந்திரன், சித்தளி நாகராஜன், பேரளி துரை, கவுள்பாளையம் செல்வக்குமார், வழக்கறிஞர்கள் கணேசன், கதிர்.கனகராஜன், பாலமுருகன், உள்ளிட்ட ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள் திராளக கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள், உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியில் காலியாக உள்ள பதவிகளை கணக்கெடுத்து நிரப்புவது குறித்தும், பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது குறித்தும், திமுகவின் கல்விக்கடன், பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி குறித்த பொய் பிரச்சாரத்தை குறித்தும், கலந்துரையாடப்பட்டது.