AIADMK in Perambalur district today, led by District Secretary RT Ramachandran, condemned the DMK for not fulfilling its promises!


பெரம்பலூர் வானொலித் திடலில், அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமையில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, நடந்து தேர்தலில் திமுக வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. அதனை நிறைவேற்ற வேண்டும், நீட், தேர்வு, கல்விக்கடன். சிலிண்டருக்கு மானியம், குடும்ப பெண்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் டீசல், விலைக்குறைப்பு, உள்ளிட்ட பல சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்த திமுக இதை அதை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி வருவதாகவும், கொரோனாவிற்கு முறையான சிகிச்சை வழங்கவும், மேகதாது அணையை தடுத்து நிறுத்தி காவிரியை காப்பற்றவும், நடுவர் மன்ற தீர்ப்பை நிறைவேற்றவும், விலைவாசியை கட்டுப்படுத்தவும், உழவர்களின் நெல்மூட்டைகளை முறையாக பாதுகாக்க வேண்டும், பொய் வழக்குகளை போடுவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்டவை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், நடந்தது. அதில், பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பேபிகாமராஜ், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் பெருமாள், அண்ணா தொழிற்சங்கம் வீரபாண்டியன் மற்றும் இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், பேரூர், கிளைக் கழகங்களில் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!