AMMA Scheme to be held Villages in Perambalur district tomorrow
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகலட:
பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர் (வடக்கு), வேப்பந்தட்டை வட்டத்தில் நூத்தப்பூர் (வடக்கு), குன்னம் வட்டத்தில் நன்னை (மேற்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் சிறுகன்பூர் (கிழக்கு) ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.