AMMA Scheme will be held tomorrow in Perambalur district Villages
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் வட்டத்தில் களரம்பட்டி, வேப்பந்தட்டை வட்டத்தில் பசும்பலூர் (தெற்கு), குன்னம் வட்டத்தில் எழுமூர் (மேற்கு) மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் அயினாபுரம், ஆகிய வருவாய் கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளன.
பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும், என தெரிவித்துள்ளார்.