Ammapalayam lake flooded due to continuous rains!

பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பெய்து வரும், கனமழையால், மாவட்டத்தில், ஏரிகள் நிரம்பி வருகின்றன. அதே போல் பச்சை மலைத் தொடரில் உள்ள மயிலூற்று அருவி, கோரையாறு அருவி, எட்டெருமை பாழி, மஞ்சள் அருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் கொட்டுகின்றன. இதே போல் இன்று அதிகாலை பெய்த மழையால், அம்மாபாளையம் ஏரி நிரம்பியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம்!

பெரம்பலூர் 08, செட்டிகுளம் 10, பாடாலூர் 02, அகரம்சிகூர் 16, லப்பைக்குடிக்காடு 13, புதுவேட்டக்குடி 4, எறையூர் 10, கிருஷ்ணாபுரம் 06, தழுதாழை 22, வி.களத்தூர் 08, வேப்பந்தட்டை 20, என மாவட்டத்தின் மொத்த மழையளவு 119 மி.மீ, சராசரி மழை அளவு 10.82 மில்லி மீட்டராகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!