அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சென்னைக்கு சென்ற வாலிபர் பலி!

schedule
2021-08-13 | 19:50h
update
2021-08-13 | 19:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

An unidentified vehicle collided with a youth who went to Chennai and died!

Advertisement

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், இருர் சர்வீஸ் ரோடு அருகே சென்னையை நோக்கி சென்ற பைக் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பைக்கை ஓட்டி வந்த நபர் தலையில் பலத்த காயமடைந்ததில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை நடத்தியதில், விபத்தில் பலியான வாலிபர், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள முஸ்லீம் நகர், நடுத் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் ஜாவித் (வயது 32) என்பதும், சொந்த ஊரில், சென்னைக்கு வேலைக்காக பைக்கில் சென்றதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 10:33:25
Privacy-Data & cookie usage: