Anti-Hindi public meeting in Perambalur! DMK district secretary Kunnam C. Rajendran’s statement!
மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பைக்கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா.எம்பி., போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். இது குறித்து, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
மத்திய அரசின் கட்டாய இந்தித் திணிப்பைக்கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன்(எனது) தலைமையில், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் – நகர் மன்ற துணை தலைவர் து.ஹரிபாஸ்கர் வரவேற்புரையில், 12.12.2022, (திங்கட்கிழமை), மாலை 5.00 மணியளவில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தேரடி திடலில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில், கழக துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., – போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் – தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் – எம்.பிரபாகரன்.எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல்பாரூக் நன்றியுரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மகளிர் அணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள், கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.