At the state level, is the highest ranked student hemalatha appreciation by civil service employee
2016-ஆம் ஆண்டு மார்ச் – ஏப்ரலில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பொதுத் தேர்வில் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரைிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி த.ஹேமலதா என்பவர் ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட 4 பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 4 பாடங்களிலும் முதலிடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.1000- வீதம் 4 பாடங்களுக்கும் சேர்த்து ரூ.4 ஆயிரத்திற்கான காசோலையினையும், பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சிப் பணியாளர் நேற்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.