காலைமலர் செய்தி எதிரொலி : பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஏ.டிஎம். வைக்க ஏற்பாடு! முன்னாள் ஆட்சியர் தரேஸ் அஹமதுவிற்கு பாராட்டு!!

schedule
2016-09-26 | 21:27h
update
2026-06-28 | 11:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

atm In Perambalur collector’s office. Organized keep!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பணம் வழங்கும் ஏ.டி.எம்.மை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கடந்த 2015 ஆண்டு காலைமலரில் செய்தியாக வெளியிடப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கினைந்த நீதிமன்றங்கள், மாவட்ட காவல் அலுவலகம், விளையாட்டு மைதானம் ஆகியவை அமைந்துள்ளது. நாள்தோறும் கணக்கானோர் வந்து செல்கின்றனர். மேலும் இப்பகுதியை சுற்றி குடியிருப்பு பகுதிகளும், அதிகத்து வருகின்றன. காலியாக உள்ள வீடுகளில் கல்லூரி மாணவர்கள், வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். திடீர் பணத் தேவைக்கு பணம் எடுக்க அருகில் உள்ள வங்கி ஏ.டி.எம்.மிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. வாகனங்களில் வருவோர்க்கு எந்த வித பிரச்சனையும் இல்லை, ஆனால் பாதாசாரிகளாக நடந்து வருவோர்கள் நடந்து சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏ.டி.எம் அமைத்தால் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் ஆகியோர் சிரமம் இன்றி அங்கேயே பணம் எடுத்து கொள்வார்கள் என்றும்,

Advertisement

இதே போல் கேஷ் டெபாசிட் எந்திரமும் அமைத்தால் வங்கியில் பணம் செலுத்த நீண்ட சென்று வரத் தேவை இருக்காது. இதனால் அனைத்து தரப்பினருக்கும், பயண நேரம், எரிபொருள் சிக்கனம் என மிச்சமாகும் என தெரிவிக்கின்றனர் என்ற கோரிக்கைக்கு தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முகப்பு பகுதியில் ஏ.டி.எம் எந்திரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நடவடிக்கை எடுத்த முன்னாள் ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமதுவை பொதுமக்கள், அலுவலர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 11:50:47
Privacy-Data & cookie usage: