பெரம்பலூர் அருகே திருமணமாகத பெண்ணுக்கு பிறந்த குழந்தையை, ரகசியமாக தத்து கொடுத்த டாக்டர், நர்ஸ் மீது வழக்குப்பதிவு

schedule
2019-10-06 | 08:53h
update
2019-10-06 | 08:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

baby of unmarried woman, secretly adopted by the doctor, nurse in charge case by police in Perambalur

பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த கவுதமி (வயது 25) என்ற திருமணமாகத பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவித்துள்ளார். அந்த ஆண் குழந்தையை அரசு தொட்டிலில் கவுதமி சேர்க்க கூறியுள்ளார் ஆனால், முறையான அரசின் அனுமதி பெறாமல், டாக்டர் தமிழரசி மற்றும் நர்ஸ் செல்வி ஆகிய இருவரும், அரணாரை கிராமத்தில் உள்ள செந்தில்குமார், சிவரஞ்சனி ஆகியோருக்கு ரகசியமாக தத்து கொடுத்துள்ளனர்.

Advertisement


இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சமூகப் பணியாளர் ரேகாவிற்கு வந்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட குழந்தை தடுப்பு உதவி ஆய்வாளர் வேலுசாமி, அலுவலர் சுகன்யா, சைல்டு லைன் உறுப்பினர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் சம்பவம் உண்மை என தெரிய வந்தது. குழந்தையை மீட்ட குழுவினர் அரியலூர் ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கலமாதா தத்து நிறுவனத்திடம் தற்காலிகமாக ஒப்படைத்தனர். மேலும், டாக்டர் தமிழரசி, நர்ஸ் செல்வி மற்றும் தம்பதியர்கள் செந்தில்குமார் – சிவரஞ்சனி மீது ரேகா புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றர்.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 08:02:20
Privacy-Data & cookie usage: