Bonus deal of trouble: a toll plaza employees returned to work again in perambalur near
நேற்று சென்னையில் நடந்த பேச்சுவார்தை தோல்வியில் முடிந்தது. அதனால் இரவு 09:00 மணிக்கு மீண்டும் தொழிலாளர்களின் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். சுங்கச் சாவடி நிர்வாகத்தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தையை ஏஐடியூசி தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் தலைமையில் இரவு 10:00 தொடங்கி நள்ளிரவு 01:30 மணி வரை நடந்தது. இறுதியில் 45 நாள் பணி ஊதியத்தை (ரூ. 11070 + 900 = 11,970)போனசாக அறிவித்ததை தொழிலாளர்கள் சார்பில் அச்தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் ஏற்றுக்கொண்டதால் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பி வாகன சுங்க கட்டணத்தை வசூலிக்க தொடங்கினர்.