Collector’s MCP at Koodalur: Minister Sivashankar distributed welfare assistance worth Rs.4.72 crore.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கூடலூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட போக்குவரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆதரவற்ற விதவைகளுக்கான உதவித்தொகை, புதிய குடும்ப அட்டைகள், உழவர் நலன் மற்றும் வேளாண் துறை சார்பில் வேளாண் கருவிகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச தையல் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறையின் சார்பில் கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் என பல்வேறு திட்டங்களின் மூலம் 361 பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலத்துார் யுனியன் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் மு.சுசீலா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.