இன்று காலை நடந்த விபத்தில், பெரம்பலூரை சேர்ந்த, ஒரே தனியார் கல்லூரியின் 3 பேருந்துகள் போட்டா போட்டியில் முந்திக் கொண்டு , அரியலூர் மற்றும் குன்னம் பகுதிகளில் இருந்து பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தன. அவைகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது சித்தளி பேருந்து நிறுத்தம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று ஏற்படுத்திய விபத்தில், சாலையின் அருகே உள்ள கம்பத்தில் மோதிய பின்னர், அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் குன்னம் அரசு பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவிகள் மீது மோதியதில் 5 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.