counseling deadline extension for enrollment of students in Govt & private ITI’s in perambalur

ITI-logoஅரசினர் தொழிற்பயிற்சி முதல்வர் மஞ்சுளா தேவி விடுத்துள்ள தகவல்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2016ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இதில் ஒருசில பயிற்சி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கைகான இடங்கள் காலியாக உள்ளது. இக்காலியிடங்களை இணையதளம் மூலமாக நிரப்புவதற்கு 24.08.2016 முதல் 30.08.2016 வரை காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.

இதற்கு 14 வயதுமுதல் 40 வயது வரையும், பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை, மேலும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடைசலர், இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார் வண்டி, மின்சாரபணியாளர், மெயின்டனன்ஸ் ஆஃப் சோலார் எக்யூப்மென்ட, ஃபுட் புரொடக்ஷன் ஆகிய தொழிற்பிரிவுகளிலும் மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பற்றவைப்பவர் தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும், விண்ணப்பதாரர் 31.08.2016 அன்று பெரம்பலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து இன ஒதுக்கீடு அடிப்படையில் காலியிடம் இருப்பின் பயிற்சியில் சேர்ந்துக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் நேரில் வந்து கலந்து கொண்டு பயிற்சியில் சேர்ந்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர், ஆலத்தூர் முதல்வரை அணுகி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!