Cumulative disease for cattle: Holidays in veterinary markets in Namakkal district for 2 weeks

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மேலும், 2 வாரங்களுக்கு கால்நடை சந்தைகளை மூடிவைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர்ஆசியாமரியம் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றங்களாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும், கால்நடைகளில் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளுக்கு வெளியூர்களிலிருந்து கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும் ஒரு கால்நடையிடமிருந்து மற்றொரு கால்நடைக்கு தொற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சந்தைகளிலிருந்து தொற்று நோய் உள்ள கால்நடைகளை வாங்கினால் மற்ற இடங்களில் உள்ள கால்நடைகளுக்கும் நோய் பரவும். எனவே தொற்று நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்படும் மோச்ஞூபாளையம் மற்றும் புதன்சந்தை ஆகிய சந்தைகள் வருகிற 22ம் தேதி முதல் முதல் ஜன.5ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நடபெறாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!