Direct admission to government ITI centers; Perambalur Collector V. Santha Information


2020-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை இரண்டு கட்டமாக நடைபெற்றது. எனினும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் ஆகிய இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளது.

எனவே 23.10.2020 முதல் 31.10.2020 வரை இந்த இரண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நேரடிச் சேர்க்கை நடைபெற உள்ளது. எனவே மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை (பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர்) உடனடியாக அணுகி காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் தாங்கள் சேர விரும்பும் தொழிற்பிரிவை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

மேலும், விபரங்களுக்கு 94990 55877, 80723 45080 என்கிற கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!