Disabled persons may apply for unemployment allowance: Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.06.2012 அதற்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 30.06.2017 அன்று தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள்; 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.
மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. அரசால் வழங்கப்படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.
மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்குரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 31.09.2017-க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம். ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பம் பெறதேவையில்லை, என அறிவிப்பு செய்துள்ளார்.