Disabled persons may apply for unemployment allowance

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் விடுத்துள்ள தகவல் :

அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுவருகின்றது. எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 30.09.2017க்கு முன்னதாக பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள்; 30.09.2017 அன்று 45 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது. மற்ற வகுப்பினர்கள் அதே போன்று 40 வயதைக் கடந்தவராக இருத்தல் கூடாது.

அரசால் வழங்கப்படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராக இருத்தல் கூடாது மனுதாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ,மாணவியராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக் கல்வி பயிலுபவராக இருக்கலாம்.

மனுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள தேசீயமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்கள் பெயரில் துவங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 30.11.2017-க்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பயனடைந்தவர்கள் விண்ணப்பம் பெறதேவையில்லை.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!