a.rasa20160510_185348பெரம்பலூர்: குன்னம் தொகுதி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் தங்க.துரைராஜ்-யை ஆதரித்து வேப்பூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து திமுக வின் கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆ.இராசா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:

திமுக தலைவர் கருணாநிதி ஒரு போதும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்க மாட்டார். அவர் தேர்தல் அறிக்கையில் பால் லிட்டர் ஒன்று விற்பனை விலை ரூ.7 குறைத்தாலும், பால் உற்பத்தியாளர்களின் விலை குறைக்கவில்லை. மாறாக பால் உற்பத்தி அதிகமாக இருப்பதால், மிச்சமாகும் பாலை பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு, முட்டையுடன் பாலையும் வழங்க அறிவித்துள்ளார்.

கலைஞர் எப்போதுமே ஒரே கல்லில் 4 மாங்காய் அடிப்பார். 3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்விக்கடன் ரத்து, வட்டியில்லா கடன், உதவித் தொகை, மாதமாதம் மின்கட்டணம் செலுத்துவதன் மூலம் மின்கட்டணம் குறைக்கும் வழி , என பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

ஆண்டு ஒன்றுக்கு பால், மின் கட்டணம் மூலம் ரூ.30 ஆயிரம் மிச்சம் செய்யலாம் என பேசினார்.
மேலும், வாக்களிக்கும் ஒரு நாளைக்கு மட்டும் 500 ரூபாய் கொடுத்து வாக்களிக்க சொல்லுவார்கள், அந்த தவறை செய்து விடாதீர்கள், தமிழ்நாட்டுக்கு 6 வது முறையாக தலைவர் கலைஞரை முதலமைச்சரை தேர்ந்தெடுத்து இந்த தமிழ்நாட்டுக்கு நல்லது செய்ய நமது குன்னம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜ்-யை வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் குன்னம்.சி.இராஜேந்திரன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், வசிஸ்டபுரம் கருணாநிதி உள்ளிட்ட திமுக கட்சியினா பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கீழப்புலியூர் பொதுக் கூட்டத்திலும், பின்னர், கொளக்காந்தம் பொதுக் கூட்டத்திலும் ஆ.இராசா கலந்து கொண்டார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!