திமுக சார்பில் பெரம்பலூர் அருகே கோடை கால தண்ணீர் பந்தல்கள் திறப்பு

schedule
2021-04-14 | 11:53h
update
2021-04-14 | 11:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

DMK opens summer free water bunks near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய தி. மு. க. சார்பில் தலைமையில், இலவச தண்ணீர் பந்தலை தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன் திறந்து வைத்து மோர்,வெள்ளரிக்காய், தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர்
செ.இரவிச்சந்திரன், அரும்பாவூர் பேரூர் செயலாளர் ஆர். ரவிச்சந்திரன், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணைப்பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராமகிருஷ்ணன், பரமசிவம், தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாஸ்கர், குணசேகரன், கோவிந்தராஜ், கீதா ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி செங்குட்டுவன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆர்.கணேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேசன், சுதாவடிவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாயகிருஷ்ணன், கிளைச்செயலாளர்கள் செல்வராஜ், குமார், அம்பேத்கர், சின்னதம்பி, சக்திவேல், பன்னீர்செல்வம், கிளை கழக பொருளாளர் விஜயன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், பிரபாத்சிங், பசும்பலூர் கிளைக்கழக செயலாளர்
ஜெயபால், வேப்பந்தட்டை கிளை செயலாளர் எஸ்.அழகுவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதே போன்று ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில், பாடலூரில் அமைக்கப்பபட்ட தண்ணீர்பந்தலை திறந்து வைத்தார். இதில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.09.2026 - 22:51:57
Privacy-Data & cookie usage: