Ex-servicemen in the 5th of February in the Namakkal are the special Redressal meeting

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் விதவையர்கள்,படைவீரர்களின் குடும்பத்தார் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் சுயதொழில் செய்திட ஏதுவாக தொழில்முனைவோர் கருத்தரங்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி செவ்வாய்கிழமை மதியம் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தான் தலைமை வகிக்கிப்பதாகவும்,

இக்கருத்தரங்கில் இந்தியன் வங்கி தொழில் பயிற்சி இயக்குநர், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர், தாட்கோ மாவட்ட மேலாளர், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர்கள் கலந்து கொண்டு அவர்களது துறைச் சார்ந்த திட்டங்கள், பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளனர். எனவே முன்னாள் படைவீரர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம். மேலும் தங்களது குறைகளை விண்ணப்பங்களாக எழுதி இரண்டு நகல்களில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!