Female worker killed by electric shock near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில், சிலம்பு அன்சாரி என்பவர் வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வம் மனைவி பழனியம்மாள் (35) என்பவர் சித்தாள் வேலை செய்து வந்தார். அங்கிருந்த உயர் மின்னழுத்தம் செல்லும் மின்சார கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து கருகி உயிரிழந்தார். இதில் உடலின சில பாகங்கள் கருகியது. அவர் உடுத்தி இருந்த உடைகளும் தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மங்கலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பழனியம்மாளின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர். மின்சாரம் தாக்கி பெண் கட்டட தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!