Finding love his wife, a young man trying to Self fire burn in Perambalur collector’s office!
பெரம்பலூர் அருகே காதல் மனைவியை சேர்த்து வைக்க கோரி, வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பபு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்த அய்யாக்கண்ணு – நல்லம்மாள் இவரது மகன் மணிகண்டன் (வயது 24), பொறியியல் பட்டதாரி, இவரும் அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த சோமு – கலையரசி ஆகியோரின் மகள் பிரசன்னாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டாற் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து மணமக்கள் இருந்த வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், தகவலின் பேரில் நரசத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் வீட்டில் இருந்து கலையரசிக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் பிரசன்னாவை பார்க்க அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளனர்.