Free and RTE scheme to children in this Act may apply to include in the school.

சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் வரும் ஏப். 20. முதல் மே 18 வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் தி.அருள்மொழிதேவி தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு இத்திட்டத்தில் LKG அல்லது ஆரம்ப வகுப்பில் மொத்தமுள்ள சேர்க்கைக்கான 25 சதவீத இடங்களுக்கு இலவசம் மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் 20.04.2018 முதல் 18.05.2018 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள முதன்மைக் கல்வி அலுவலகம், வெங்கடேசபுரத்திலுள்ள மாவட்டக் கல்வி அலுவலகம், கடைவீதி துறையூர் சாலையிலுள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம் SSA -(வட்டாட்சியர் அலுவலக வளாகம் பெரம்பலூர்),

பெரம்பலூர் உதவித் தொடக்ககல்வி அலுவலகம் (ரோவர் பள்ளி பின்புறம்), வேப்பந்தட்டை உதவித் தொடக்ககல்வி அலுவலகம் (ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் வேப்பந்தட்டை), வேப்பூர் உதவித் தொடக்க கல்வி அலுவலகம் (அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் வேப்பூர்), ஆலத்தூர் உதவித் தொடக்ககல்வி அலுவலகம் (அரசுமேல்நிலைப்பள்ளி வளாகம் பாடாலூர்), ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மேலும், இத்திட்டத்தில் சேர்க்க விரும்பும் பள்ளிகளிலேயே விண்ணப்பங்களைப் பெற்றால் அதனை பள்ளியிலேயே இணையதளத்தில் பதிவு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு தனியார் சுயநிதி பள்ளியின் தகவல் பலகையில் அந்த பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் குறித்து அறிவிப்பு இடம் பெற்றிருக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்பபடும்.

மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், இணையதளவழியில் விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கானச் சான்று, மாற்றுத் திறனாளிச் சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற சான்றுகளை விண்ணப்பிக்கும்போது கொண்டு வரவேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!