பெரம்பலூரில் கறவை மாடு பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி : சான்றிதழும் உண்டு

schedule
2019-06-25 | 09:35h
update
2019-06-25 | 09:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Free Practice of Dairy Beekeeping in Perambalur: Certified

பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் வெளியிட்டடுள்ள அறிக்கை:

கறவை மாடு பராமரிப்பு பயிற்சி வகுப்பு வருகிற ஜூன்26ம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக,பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும். சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Advertisement

மேற்கண்டபயிற்சியின் 10 நாட்கள் நடைபெறும். காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்கும் பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் இப் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் அரசால் அங்கீகரிக்கப் பட்டதாகும்.

விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனரிடம் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ், 1 ஸ்டாம்ப் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து ஜூன் 26ஆம் தேதி நடக்கவிருக்கும் நேர்முக தேர்வு மற்றும் நுழைவு தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெறுபவர்களுக்கு பயிற்சிக்கு அனுமதி வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு ஐஓபி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், சங்குப்பேட்டை, பெரம்பலூர் என்ற முகவரியிலோ அல்லது 04238277896 தொலைப்பேசி மூலமாக தொடர்புக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 07:00:26
Privacy-Data & cookie usage: