தெலுங்கானாவில் இருந்து 2 ஆயிரத்து 600 டன் ரேசன் அரிசி ரயில் மூலம் நாமக்கல் வந்தடைந்தது

schedule
2018-10-20 | 23:00h
update
2026-04-22 | 17:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

From Telangana, Namakkal reached 2 thousand 600 tonnes Ration rice train

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த 2 ஆயிரத்து 600 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் 110 லாரிகள் மூலம் சிவில் சப்ளை குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு தேவையான 2 ஆயிரத்து 600 டன் எடையுள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை அரிசி 42 ரயில் வேகன்கள் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது.

அங்கிருந்து நாமக்கல், ராசிபுரம், பரமத்தி, கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக சிவில் சப்ளை குடோனுக்கு சுமார் 110 லாரிகளில் அரிசிமூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை நாமக்கல் ரயில்வே கூட்ஸ்ஷெட் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் நல்லதம்பி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
22.04.2026 - 17:41:23
Privacy-Data & cookie usage: