Gas Consumer Complaints Day Meeting in Perambalur District: Collector Venkatapriya Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
எரிவாயு உருளைகள் மறுநிரப்பு வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த குறைகளின்மீது நடவடிக்கை எடுப்பதில் குறைபாடுகள் மற்றும் இதர புகார்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுத்து, எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்துவது தொடர்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.12.2021 பிற்பகல் 3.30 மணி அளவில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவன விற்பனை அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு சம்பந்தமாக குறைகள் இருப்பின் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம். மேலும் எரிவாயு விநியோகம் தொடர்பாக காணப்படும் குறைபாடுகள் களைவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.