Government Polytechnic College, extension of first year admission; Perambalur Collector Santha Info

பெரம்பலூர் கலெக்டர் சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021ஆம் கல்வியாண்டின் முதலாமாண்டு பட்டய மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் முதலாமாண்டு பட்டய மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் முதற்கட்ட கலந்தாய்வு நடைப்பெற்று முடிந்தது. தற்பொழுது ஆன்லைன் மூலம் முதற்கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள காலியிடங்கள் நிரப்பி கொள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கத்திலிருந்து அனுமதி கிடைக்க பெற்றள்ளது. எனவே 10-ஆம் வகுப்பு முடித்து முதற்கட்ட கலந்தாய்வில் கலந்துக் கொள்ள தவறிய மாணவ – மாணவர்களுக்கு அடுத்தக்கட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அக்31 கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.150- செலுத்தவேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் தங்களது சுய சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இக்கல்லூரி விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாணவர்களுக்கு இனசுழற்சி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கலந்தாய்வு பற்றிய தகவல் தொலைப்பேசி வாயிலாக மாணவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இக்கல்லூரியில் படிப்பதற்கான கல்லூரி கட்டணம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.2194- மட்டுமே ஆகும்.

மேலும், இக்கல்லூரியில் சேரும் மாணவர்கள் கல்வி உதவித் தொகை, இலவச பஸ்பயணச்சலுகை, இலவச மடிக்கணினி மற்றும் அரசு நல திட்டங்கள் அனைத்தையும் பெறலாம். மாணவியர்களுக்கு கல்லூரிக்கு அருகில் இலவச மகளிர் விடுதியும் மற்றும் மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தினுள் விடுதி செயல்பட்டு வருகிறது. விருப்பமுள்ள மாணவ – மாணவியர்கள் விடுதியை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04328-243200 என்ற தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!