Government Special GDP at Thondaimanthurai near Perambalur; Rs. 1 crore 10 lakhs worth of welfare assistance

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின், சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா வேப்பந்தட்டை வட்டம் தொண்டமாந்துறை (மேற்கு) கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 408 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று கலெக்டர் வே.சாந்தா வழங்கினார்.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன் பெறுவதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அலுவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 408 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 10 லட்சத்து 56 ஆயிரத்து 303 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வே.சாந்தா வழங்கினார். முன்னதாக பேசிய கலெக்டர் வே.சாந்தா கொரானா வைரஸ் விழிப்புணர்வுடன் இருப்பது குறித்தும் எடுத்துரைத்தார். இதில், அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!