Perambalur District Retiers Day grievance day Meeting

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

நிதித்துறை, அரசு கூடுதல் செயலாளர், இயக்குநர் ஓய்வூதிய இயக்குநரகம் அவர்கள் தலைமையில், மாவட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 13.10.2017 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த குறைதீர்க்கும் மனுக்கள் இரண்டு பிரதிகளுடன் 05.10.2017 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம். மேலும் 13.10.2017 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் கலந்து கொண்டு பயன்பெறலாம், என கேட்டுக் கொண்டுள்ளளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!