In Perambalur, citizens blocked the road holding umbrellas in the pouring rain demanding drinking water
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில், 8வது வார்டு மற்றும் 9 வது வார்டு பகுதி பொதுமக்களுக்கு கடந்த 1 மாதமாக காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, இன்று மாலை 6 மணியளவில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவறிந்து வந்த, நகராட்சி அதிகாரிகள் நாளை குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்
பெண்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், துறைமங்கலம் மூன்று ரோடு பகுதியில், ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.