In Perambalur day meeting of the District Public Grievances and welfare benefits worth Rs 64 thousand 500 beneficiaries presented to the district collector.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று (01.08.2016) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 504 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரிடையாக அளித்தனர்.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குன்னம் வட்டம் பெரியம்மாபாளயத்தை சேர்ந்த மன்னாதி – தனலெட்சுமி தம்பதியரின் இரு குழந்தைககள் குட்டையில் தவறி விழுந்து இறந்ததை தொடர்ந்து குழந்தைக்கு தலா.ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரமும், முருகேசன் என்பவரின் குழந்தை இறந்ததை தொடர்ந்து ரூ.15 ஆயிரமும், பெரம்பலூர் நகரை சேர்ந்த பாப்பாத்தி மின்சாரம் தாக்கி இறந்ததை தொடரந்து ரூ15,ஆயிரமும் என மொத்தம் ரூ.60 ஆயிரமும், நலிந்த நிலையிலிருக்கும் கலைஞர்களுக்கான நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதன் என்பவருக்கு ரூ.1,500 வீதம் 3 மாதங்களுக்கு ரூ.4,500 -ம் என ஒட்டு மொத்தமாக ரூ.64,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கினார்.
இக்கூட்டத்தில் துணை ஆட்சியர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.