பெரம்பலூர் அருகே கடன் பிரச்சனையால் தீக்குளித்த வாலிபர் சாவு

schedule
2016-10-27 | 20:38h
update
2026-06-27 | 22:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur debt problem at the death of the young men set themselves on fire


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அசூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் முத்துசாமி (26) மரம் வியாபாரி . முத்துசாமிக்கு அதிக கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி தருமாறு கேட்டு உள்ளனர்.

Advertisement

இதனால் மனமுடைந்த முத்துசாமி கடந்த 21-ந் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் மண்ணென்னை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி இன்று மாலை சிகிச்சையின் பலன் அளிக்காததால் இறந்தார்.

இது குறித்து முத்துசாமியின் தந்தை பெரியசாமி குன்னம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:28:02
Privacy-Data & cookie usage: