பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று 24,176 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி ; கலெக்டர் தகவல்!

schedule
2021-10-10 | 17:04h
update
2021-10-10 | 17:04h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur district, 24,176 people were vaccinated against corona today; Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இன்று 5ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் 240 இடத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,500க்கும் மேற்பட்ட நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டனர்.

Advertisement

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 5,878 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 5,013 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 5,947 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 7,338 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் மொத்தம் 24,176 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது, என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 10:52:10
Privacy-Data & cookie usage: