In Perambalur district, public grievance camp related to food supply: Collector Information

பெரம்பலூர் கலெக்டர் (பொ) சி.ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் வட்டம் – அம்மாபாளையம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கர் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம் – கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ந.சக்திவேல் தலைமையிலும், குன்னம் வட்டம் – அந்தூர் கிராமத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சி.கிறிஸ்டி தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் பொது விநியோகத்திட்டம் துணைப்பதிவாளர் த.பாண்டித்துரை தலைமையிலும் 13.02.2021 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. மேற்படி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!