In Perambalur district, thunder and lightning lashed the area and it rained

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் இடி மின்னல் பலத்த காற்றுடன் சுழற்றி சுழற்றி மழை பெய்தது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், நான்கு ரோடு,

கவுல்பாளையம், பாடாலூர், வேப்பந்தட்டை, செட்டிக்குளம், வாலிகண்டபுரம், குன்னம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையில் சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. சுழல் காற்று வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள், பெயர் பலகைகள் காற்றில் வீழ்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகளும் முறிந்து வீழ்ந்தது. காலை முதல் வெப்பம் வாட்டிய நிலையில் மாலையில் பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. பாதுகாப்பு கருதி மின்சாரம் விநியோகம் தடை செய்யப்பட்டது. பின்னர் பாதிப்பு நிலை அறிந்து மின்சாரம் விநியோகம் செய்யப்பட உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!