In Perambalur : Job fair of private companies by the Pudhuvalvu thittam
இப்பயிற்சிக்குரிய வேலைவாய்ப்பு முகாம் வரும் 08.09.2016 வியாழன் அன்று காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இம்முகாமில் 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள், 10-வது, +2 கல்வித்தகுதியுடன் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ் மற்றும் 2 புகைப்படத்துடன் கலந்து கொள்ளவேண்டும்.
மேலும், இம்முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறுபவர்களுக்கு முதல் வருடம் மாதந்தோறும் ரூ.5,500-ம் 2-வது வருடம் ரூ.6,500-ம் 3-வது வருடம் ரூ.8,000-மும் 4-வது வருடம் ரூ.10,000-ம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
பயிற்சிக்கு பின் தகுதியின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கப்படும். எனவே, இளைஞர;கள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.