In Perambalur lost control near the accident tractor accident: Driver killed, 6 injured
இந்த விபத்தில் தப்பி குதிக்க முயன்ற டிராக்டர் ஓட்டுனரான அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் ரமேஷ்குமார்(வயது – 30) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வெங்காய மூட்டைகளை ஏற்ற டிராக்டரில் பயணித்த தொழிலாளர்கள் அம்மாபாளையத்தை சேர்ந்த தனசேகர், சுரேஷ், சுந்தர்ராஜன், சரவணன் உட்பட 6 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.