பெரம்பலூர் : சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

schedule
2016-08-30 | 16:13h
update
2026-06-28 | 06:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur: minority students to apply for scholarships deadline extension

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல் :

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும்; அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பள்ளி மேற்படிப்பு பயிலும் கிறித்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர் மற்றும் பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சார்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2016-2017-ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைக்கான பள்ளி படிப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கான புதியது (ம) புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்திட வேண்டிய காலக்கெடு 31.08.2016-லிருந்து 30.09.2016 வரையிலும் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, சிறுபான்மையின மாணவர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடைய வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 06:26:10
Privacy-Data & cookie usage: