பெரம்பலூர் அருகே பெற்றோர் வீட்டு வேலை சரியான செய்யவில்லை என திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை

schedule
2016-09-06 | 20:38h
update
2026-06-28 | 07:47h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

In Perambalur not doing the right work at home parents scolded school student suicide

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெற்றோர்கள் வீட்டு வேலை சரியான செய்யவில்லை என திட்டியதால் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பந்தட்டை வட்டம், அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகள் சுபி (வயது 14) அருகே உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். பெற்றோர்கள் வீட்டு வேலை சரியான செய்யவில்லை என திட்டியதாக தெரிகிறது.

Advertisement

இதனால் மனமுடைந்த மாணவி இன்று மதியம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மாணவி சுபியின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் வீட்டு வேலை சரியான செய்யவில்லை பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 07:47:44
Privacy-Data & cookie usage: