In Perambalur provide drinking water near the road blockade demanding the public with empty pots!

பெரம்பலூர் அருகே குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அந்தூர் கிராமத்தில் குடிநீர் வழங்க கோரி அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்தூர் கிராமத்தில் போதியளவு நீர் கிணறுகளில் இல்லை. இதனால் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர். அது மட்டுமல்லாமல் அருகே உள்ள குளத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற நீரை குடிக்கப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் நோய்த் தாக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும்

இதனால் பாதிப்படைந்த ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர், இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புசெல்வன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளம் ஆகியோர் பொதுமக்களிடம் சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்தையின் முடிவில் தினமும் லாரியில் குடிநீர் வினியோகம் செய்வதாகவும், புதிதாக போர்வெல் அமைக்கவும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வேப்பூர் – குன்னம் சாலையில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பொதுமக்கள் ஒரு மணி நேர கால தாமதத்திற்கு பின்பே அலுவல்களுக்கு சென்றடைந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!