In Perambalur roadblock to protest the municipality water supply
பெரம்பலூர் அரசு அலுவலர்கள் குடியிருப்பிற்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத நகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலைமறியல் பேராட்டம் நடத்தினர்
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அரசு அலுவலர்கள் குடியிருப்பில் 306 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை. நாள் தோறும் தண்ணீர் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாகவும், அதிகாரிகள் மெத்தன போக்கை கண்டித்து இன்று மாலை அப்பகுதி மக்கள் பெரம்பலூர் – திருச்சி சாலையில் காலி குடங்களுடன் அவ்வழியாக வந்த பேருந்துகளை மறித்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் அரசு குடியிருப்புவாசிகள் தங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின்னர், அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து குடியிருப்புவாசிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் தேங்கி நின்றது.